சுறாவகை மீன்களை வேட்டையாடியதாக மீனவர்கள் 10 பேர் கைது

கன்னியாகுமரி: குஜராத் கடல் பகுதியில் தடைசெய்யப்பட்ட டால்ஃபின் மற்றும் சுறாவகை மீன்களை வேட்டையாடியதாக கன்னியாகுமரி மீனவர்கள் 10 பேரை கடலோர காவல் படையினர் கைது செய்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம் தூத்தூர் மீனவ கிராமத்தை சேர்ந்த ஆண்டனி என்பவருக்கு சொந்தமான டயனாஸ் 2 என்ற விசைப்படகில் 10க்கும் மேற்பட்ட மீனவர்கள் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்றுள்ளனர்.

குஜராத் ஆழ்கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, கடலோர காவல் படையினர், படகில் சோதனை நடத்தினர்.

அரசால் பிடிக்க தடை விதிக்கபட்டுள்ள அரியவகை டால்ஃபின் மற்றும் சுறா மீன்களை பிடித்து பதுக்கி வைத்திருந்ததாக 10 மீனவர்களையும் கைது செய்து வேறாவல் துறைமுகத்தில் வைத்து விசாரித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.