சென்னையில் கொரோனாவுக்கு 12,785 பேர் சிகிச்சை; மண்டல வாரியாக முழு தகவல்

சென்னையில் 98,767 பேருக்கு இதுவரை கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் தற்போது 12,785 பேர் மட்டுமே பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 83,890 பேர் இதுவரை குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

சென்னையில் 59.19% ஆண்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். பெண்களில் 40.81% பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் ஒரேநாளில் 12,880 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் கொரோனா சிகிச்சை பெற்று வருபவர்கள் எண்ணிக்கையை சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

இன்று காலை நிலவரப்படி கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருவோர் விபரம்:-
கோடம்பாக்கம் - 1,613
அண்ணாநகர் - 1,362
தேனாம்பேட்டை - 1,025
ராயபும் - 826
திரு.வி.க.நகர் - 1,094
தண்டையார்பேட்டை - 603
வளசரவாக்கம் -978
திருவொற்றியூர் - 417
மணலி - 141
மாதவரம் - 633
அம்பத்தூர் - 1,266
ஆலந்தூர் - 563
அடையாறு - 1,167
பெருங்குடி - 479
சோழிங்கநல்லூர் - 466