15 மருத்துவமனைகள் செயல்பாட்டுக்கு வந்துள்ளது: அமைச்சர் தகவல்

சென்னை: அமைச்சர் தகவல்... தற்போதைய ஆட்சியில் அறநிலையத்துறைக்குச் சொந்தமான கோயில்களில் இதுவரை 15 மருத்துவமனைகள் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக அமைச்சர் சேகர்பாபு கூறினார்.

சென்னை பாரிமுனையில் தனியார் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்ட முத்துக்குமாரசுவாமி கோயிலுக்குச் சொந்தமான நிலத்தில் புதிய மருத்துவமனை அமைக்கப்படவுள்ள இடத்தை பார்வையிட்ட அமைச்சர் சேகர்பாபு, பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.

அறநிலையத்துறை சார்பில் இதுவரை 4 ஆயிரத்து 874 கோடி ரூபாய் மதிப்புள்ள 5 ஆயிரத்து 104 ஏக்கர் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

அறநிலையத்துறைக்குச் சொந்தமான கோயில்களில் இதுவரை 15 மருத்துவமனைகள் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக என்று அப்போது அவர் கூறினார்.