தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்த வண்ணம் உள்ளது. தமிழகத்தில் இதுவரை 74,622 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். பலி எண்ணிக்கை 957 ஆக அதிகரித்துள்ளது. மற்ற மாவட்டங்களை விட சென்னையில் தான் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது.
சென்னையில் 49 ஆயிரத்து 690 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 28 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குணம் அடைந்து உள்ளனர். 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனாவுக்கு இதுவரை 730 பேர் உயிரிழந்துள்ளனர்.
சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் எந்தெந்த மண்டலங்களில் எத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற விவரம்:- ராயபுரம் - 7,211 கோடம்பாக்கம் - 5,316 திரு.வி.க.நகர் - 4,132 அண்ணாநகர் - 5,397 தண்டையார்பேட்டை - 5,989 தேனாம்பேட்டை - 5,655 திருவொற்றியூர் - 1,912 வளசரவாக்கம் - 2,201 பெருங்குடி - 944 அடையார் - 3,057 அம்பத்தூர் - 1,982 ஆலந்தூர் - 1,229 மாதவரம் - 1,524 சோழிங்கநல்லூர் - 1,037 மணலி - 798