தமிழகத்தில் நேற்று 5 ஆயிரத்து 175 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 2 லட்சத்து 73 ஆயிரத்து 460 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் 54 ஆயிரத்து 184 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்த 319 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிலர் தங்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்றும் வருகின்றனர்.
குறிப்பாக சென்னையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருகிறது. ஆனால் திருநெல்வேலி, தூத்துக்குடி, மதுரை, விருதுநகர் போன்ற தென்மாவட்டங்களில் வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.
மேலும், கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று ஒரே நாளில் 6 ஆயிரத்து 31 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் மாநிலத்தில் வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 2 லட்சத்து 14 ஆயிரத்து 815 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் தாக்குதலுக்கு இன்று ஒரே நாளில் 112 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 4 ஆயிரத்து 461 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர்கள் மாவட்ட வாரியாக விவரம்:- அரியலூர் - 220 செங்கல்பட்டு - 2,683 சென்னை - 11,811 கோவை - 1,571 கடலூர் - 1,802 தர்மபுரி - 87 திண்டுக்கல் - 540 ஈரோடு - 209 கள்ளக்குறிச்சி - 915 காஞ்சிபுரம் - 2,846 கன்னியாகுமரி - 1,955 கரூர் - 304 கிருஷ்ணகிரி - 449 மதுரை - 2,107 நாகை - 431 நாமக்கல் - 368 நீலகிரி - 164 பெரம்பலூர் - 170 புதுக்கோட்டை - 812 ராமநாதபுரம் - 424 ராணிப்பேட்டை - 1,677 சேலம் - 1,166 சிவகங்கை - 511 தென்காசி - 866 தஞ்சாவூர் - 812 தேனி - 2,668 திருப்பத்தூர் - 459 திருவள்ளூர் - 3,548 திருவண்ணாமலை - 2,148 திருவாரூர் - 287 தூத்துக்குடி - 1,840 திருநெல்வேலி - 2,136 திருப்பூர் - 332 திருச்சி - 1,423 வேலூர் - 1,311 விழுப்புரம் - 820 விருதுநகர் - 1,993