அதிமுகவின் வளர்ச்சியை நிறுத்த முடியாது... எடப்பாடி பழனிசாமி சூளுரை

சென்னை: அதிமுகவை பழிவாங்கும் நோக்கில் செயல்படும் திமுக ஆட்சிதான் அதன் பலனை அனுபவிக்கும். அதிமுகவின் வளர்ச்சியை நிறுத்த முடியாது என்று எடப்பாடி பழனிசாமி பேசினார்.


சொத்துவரி உயர்வு, மின்கட்டண உயர்வு, குடிநீர், கழிவுநீர் இணைப்பு கட்டண உயர்வு உள்ளிட்டவை அமல்படுத்தப்பட்ட சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே திமுக அரசைக் கண்டித்து அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இதில் பங்கேற்ற அதிமுக தற்காலிக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது: திமுக அரசு ஆட்சிக்கு வந்து அனைத்து வரிகளும் உயர்த்தப்பட்டுள்ளன. மின்கட்டணத்தை பலமடங்கு உயர்த்தி ஏழை மக்களை பாதிக்கிறது. உழைப்பால் உயர்ந்த அதிமுகவை எந்தக் கொம்பனாலும் அழிக்கவோ, ஒடுக்கவோ முடியாது.

அதிமுகவை அழிக்க திமுக முயற்சிக்கும் போதெல்லாம் அதிமுக எழுச்சி பெற்று ஆட்சியைப் பிடித்த வரலாறு உண்டு. அ.தி.மு.க. மீண்டும் தமிழகத்தில் ஆட்சியை கொண்டு வருவோம். நான் ஆட்சிக்கு வந்ததும் மூன்றே மாதத்தில் ஐந்து மாதங்களில் ஆட்சி கவிழும் என்று ஆரூடம் கூறினார்.

ஆனால் தமிழகத்திற்கு சிறப்பான ஆட்சியை கொடுத்தேன். அ.தி.மு.க. எத்தனை வழக்குகளையும் துணிச்சலுடன் எதிர்கொள்ளும் ஆற்றல் பெற்ற இயக்கம். மக்களுக்கு பலன் அளிக்காமல் அதிமுகவை பழிவாங்கும் நோக்கில் செயல்படும் திமுக ஆட்சிதான் அதன் பலனை அனுபவிக்கும். அதிமுகவின் வளர்ச்சியை நிறுத்த முடியாது. இவ்வாறு அவர் பேசினார்.