பஞ்சாப்பில் சட்டம் ஒழுங்கை பராமரிக்க ஆம் ஆத்மி தவறிவிட்டதாக குற்றச்சாட்டு

சண்டிகர்: தவறிவிட்டது... ஆம் ஆத்மி அரசு சட்டம் ஒழுங்கைப் பராமரிக்க தவறிவிட்டது என்று மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் குற்றம்சாட்டியுள்ளார்.

பஞ்சாபில் ஆம் ஆத்மி அரசு சட்டம் ஒழுங்கை பாதுகாக்க தவறி விட்டதாக மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார்.

சண்டிகரில் பேசிய அவர், அம்ரிந்தர் சிங் முதலமைச்சராக இருந்த போது மத்திய அரசுக்கு ஒத்துழைப்பு தந்து சட்டம் ஒழுங்கை பராமரித்து வந்தார் என்றும் இப்போதைய அரசு ஒத்துழைப்பு தரவில்லை என்றும் ராஜ்நாத்சிங் விமர்சித்தார்.

மாநில அரசுகளைப் பொருத்தவரை மத்திய அரசுக்கு பாரபட்சம் இல்லை என்றும் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்சிங் தெரிவித்தார்