சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழை ... சென்னை மாநகராட்சி சார்பில் உதவி எண்கள் அறிவிப்பு

சென்னை : சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்றிரவு முதல் மழை பெய்து வரும் நிலையில், சென்னை மாநகராட்சி சார்பில் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது .சென்னையில் நேற்று இரவு முதல் மழை வெளுத்து வாங்கி கொண்டு வருகிறது. எழும்பூர், புரசைவாக்கம் ஆகிய பகுதிகளிலும்

இதையடுத்து வேப்பேரி, பெரியமேடு, திருவல்லிக்கேணி, பட்டினப்பாக்கம், அயனாவரம், கீழ்ப்பாக்கம், சேத்துப்பட்டு, நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், அண்ணா நகர், வில்லிவாக்கம், பெசன்ட் நகர், கே.கே.நகர், அசோக்நகர், ஈக்காட்டு தாங்கல் சைதாப்பேட்டை கிண்டி ஆகிய பகுதிகளிலும்

அதை தொடர்ந்து திருவான்மியூர் உள்பட நகரின் பெரும்பாலான இடங்களில் கனமழை நீடித்தது. அதைபோல சென்னை புறநகர் பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கியது. தாம்பரம் பல்லாவரம், குரோம்பேட்டை, தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து கொண்டு வருகிறது.

இதனால் சாலைகளில் முழங்கால் அளவிற்கு மழைநீர் தேங்கியுள்ளதால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் பெரிதும் அவதியடைந்துள்ளனர்.