என் மகள் கோழை அல்ல... ஹேமந்து தான் சாகடித்து விட்டார் - சித்ராவின் தாயார் கண்ணீர் பேட்டி

சின்னத்திரை நடிகை சித்ரா நேற்று தற்கொலை செய்து கொண்டுள்ள நிலையில் அவரது உடல் இன்று பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனைகள் முடிக்கப்பட்டவுடன் சித்ராவின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து சித்ராவின் கோட்டூர்புரம் வீட்டிற்கு தற்போது அவரது உடலை கொண்டு செல்லப்படுகிறது. இந்த நிலையில் பிரேத பரிசோதனைக்கு பின் உடலை பெற்றுக் கொண்ட சித்ராவின் தாயார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

'எனது மகளை அவரது கணவர் தான் அடித்து சாகடித்த விட்டார். என் மகள் கோழை அல்ல. யாருக்காவது தற்கொலை எண்ணம் இருந்தால் அந்த எண்ணத்தை எனது மகள் மாற்றுவார். அவர் தற்கொலை செய்து கொண்டிருக்க வாய்ப்பே இல்லை.

சித்ராவுக்கு பதிவு திருமணம் நடந்தது உண்மைதான். பதிவு திருமணத்தில் 6 பேர் மட்டும் கலந்து கொண்டோம். ஹேமந்தை நம்பி நான் சித்ராவை அவரிடம் ஒப்படைத்தேன். ஆனால் அவர் சாகடித்து விட்டார். அவரை நானே கொன்றுவிடுவேன். முல்லை ரசிகர்கள் அவருக்கு சரியான பாடம் புகட்ட வேண்டும் என்று ஆவேசமாக கூறினார்.

மேலும் அவர் கூறுகையில், எனது மகளை அவரது கணவன் கொலை செய்து விட்டதாக போலீசில் புகார் அளிப்பேன். வரும் பிப்ரவரி 10ஆம் தேதி தான் என் மகளுக்கு ஊரறிய திருமணத்திற்கு ஏற்பாடு செய்திருந்தோம். அதற்குள் இப்படி ஆகிவிட்டது என்று கூறி கதறி அழுதார். இந்த பேட்டி தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.