தொடரும் மழை.. உஷார் மக்களே!

சென்னை: சென்னை மற்றும் அதை சுற்றி உள்ள பகுதிகளில் மழை பெய்து வருகின்றது. ஆதலால் செம்பரம்பாக்கம் எரிக்கு நீர் வரத்து அதிகமாய் உள்ளது.
இந்த ஏரியின் உயரம் 24 அடி என்ற நிலையில், தொடர் நீர் வரத்து காரணமாக இன்று காலை நிலவரப்படி ஏரியில் 23.48 அடிக்கு நீர் மட்டம் உயர்ந்தது. மழை விட்டு விட்டு பெய்வதால் வெள்ள நீர்வரத்து காரணமாக ஏரியின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.செம்பரம்பாக்கம் ஏரியின் பாதுகாப்பான நீர் அளவு 23 அடி தன் அனால் மதியம் 12 மணி அளவில் வினாடிக்கு 250 கன அடி உபரி நீர் திறக்கப்பட்டது. மேலும் நீர் வரத்தை பொருத்து உபரி நீர் திறந்து விட்டால் வெள்ளம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

மேலும் செம்பரம்பாக்கம் ஏரியை மாவட்ட ஆட்சியர் பார்வை இட்டார். நீர் திறந்து விட்டால் சில பகுதிகளில் வெள்ள அபாயம் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.
ஆதால் மக்கள் நலன் கருதி கரை ஓரம் இருக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க கோரி விண்ணப்பம் விடுத்தது உள்ளனர். மேலும் அணையின் நீர்மட்டம் மற்றும் திறந்துவிடப்படும் நீரின் அளவில் பொது பணித்துறை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.