வேலூர் மாவட்டத்தில் புதிதாக 174 பேருக்கு கொரோனா உறுதி

வேலூர் மாவட்டத்தில் ஏற்கனவே 14,792 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில் புதிதாக 174 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பரவி வரும் கொரோனா தாக்குதலுக்கு இதுவரை 5 லட்சத்து 97 ஆயிரத்து 602 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டவர்களில் 46 ஆயிரத்து 263 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 5 லட்சத்து 41 ஆயிரத்து 819 ஆக அதிகரித்துள்ளது. ஆனாலும், வைரஸ் தாக்குதலுக்கு தமிழகத்தில் பலியானோர் எண்ணிக்கை 9 ஆயிரத்து 520 ஆக அதிகரித்துள்ளது.

மற்ற மாவட்டங்களை விட சென்னையில் தான் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது.

சென்னையை தொடர்ந்து செங்கல்பட்டு, கோவை, கடலூர், திருவள்ளூர், சேலம், திருவண்ணாமலை, விழுப்புரம், வேலூர் ஆகிய மாவட்டங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

வேலூர் மாவட்டத்தில் ஏற்கனவே 14,792 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில் புதிதாக 174 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 14,966 ஆக உயர்ந்துள்ளது. சிகிச்சை பெற்று வந்தவர்களில் இதுவரை 13,702 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். ஆனாலும் சிகிச்சை பலனின்றி 242 பேர் உயிரிழந்துள்ளனர்.