தமிழகத்தில் கொரோனாவால் பலியானவர்கள் எண்ணிக்கை 11 ஆயிரம் ஆக உயர்வு

தமிழகத்தில் இன்று கொரோனாவால் 35 பேர் உயிரிழந்தனர். இதன்மூலம் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 11,018 ஆக அதிகரித்துள்ளது

தமிழகத்தில் இன்று புதிதாக 2,516 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதன்முலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 7,16,751 ஆக அதிகரித்துள்ளது. இதில் சென்னையில் மேலும் 668 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இன்று மட்டும் 72,433 கொரோனா மாதிரிகளும், இதுவரை 97,32,863 மாதிரிகளும் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் தமிழகத்தில் இன்று மேலும் 71,147 பேருக்கும், இதுவரை 94,68,838 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் மேலும் 35 பேர் உயிரிழந்தனர். இதன்மூலம் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 11,018 ஆக அதிகரித்துள்ளது.