மதுரையில் 3 மருத்துவ மாணவிகளுக்கு கொரோனா தொற்று

மதுரையில் நேற்று புதிதாக 18 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் மதுரை மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்து 392 ஆக உயர்ந்துள்ளது. மதுரையில் நேற்று உயிரிழப்பு ஏதும் இல்லை.

இதுவரை மதுரை அரசு கல்லூரியில் படிக்கும் மருத்துவ மாணவர்கள் மூன்று பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே அவர்களுடன் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்தநிலையில் நேற்று ஒரு மருத்துவ கல்லூரி மாணவி, பாராமெடிக்கல் படிப்பு மாணவிகள் இரண்டு பேர் என மொத்தம் மூன்று பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவர்கள் மூன்று பேரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஏற்கனவே சென்னை ஐ.ஐ.டி. மாணவர்களுக்கு கொரோனா தொற்று பரவியது மாணவர்களிடையே மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியது. நிலையில் தற்போது மதுரை மருத்துவ கல்லூரி மாணவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது மாணவர்களிடையே மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.