தமிழகத்தில் முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு இன்று தொடங்குகிறது

சென்னை: மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம் (டிஎம்இ) ஆனது, தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் மீதம் உள்ள 50 சதவீத இடங்கள், தனியாா் மருத்துவக் கல்லூரிகளின் மாநில அரசுக்கான இடங்கள் மற்றும் நிா்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வை நடத்தி கொண்டு வருகிறது.

அந்தவகையில் எம்.டி., எம்.எஸ்., டிப்ளமோ மற்றும் எம்.டி.எஸ். போன்ற முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான 2023-2024-ஆம் கல்வி ஆண்டிற்கான மாணவா் சோ்க்கை தொடங்கி உள்ளது. எனவே இதற்கான மாநில கலந்தாய்வுக்கு கடந்த மாதம் 6ம் தேதி முதல் இணையவழியில் நடைபெற்று வந்த விண்ணப்ப பதிவு 17-ம் தேதியுடன் நிறைவடைந்தது.

பரிசீலனைக்குப் பின், எம்.டி., எம்.எஸ்., டிப்ளமோ படிப்புகளுக்கான அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு 7,526 விண்ணப்பங்களும், நிா்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு 3,036 விண்ணப்பங்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

அதேபோன்று எம்.டி.எஸ். படிப்புக்கான அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு 661 விண்ணப்பங்களும், நிா்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு 336 விண்ணப்பங்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டு, பின்அதற்கான தரவரிசைப் பட்டியலும் வெளியிடப்பட்டது. இந்நிலையில், இன்று முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு தொடங்குகிறது. மக்கள் நல்வாழ்வுத்துறை https://mcc.nic.in என்ற இணையதளத்தில் கலந்தாய்வு நடைபெற உள்ளது.