ஆன்லைன் சூதாட்டத்துக்கு எதிரான தடை மசோதா நிறைவேற்றப்பட்டதற்கு டி.டி.வி. தினகரன் வரவேற்பு

சென்னை: வரவேற்கிறோம்... தமிழக சட்டப்பேரவையில் மீண்டும் அனைத்துக் கட்சிகளின் ஆதரவுடன் ஆன்லைன் சூதாட்டத்துக்கு எதிரான தடை மசோதா ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளதை வரவேற்பதாக தினகரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் தளத்தில் இன்று வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: தமிழக சட்டப்பேரவையில் அனைத்துக் கட்சிகளின் ஆதரவுடன் ஆன்லைன் சூதாட்டத்துக்கு எதிரான தடை மசோதா ஒருமனதாக நிறைவேற்றப்பட்டதை வரவேற்கிறேன்.

ஆன்லைன் சூதாட்டத்துக்கு எதிரான தடை மசோதாவை நிறைவேற்ற மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது என மத்திய அமைச்சர் நாடாளுமன்றத்தில் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ள நிலையில், இந்த மசோதா மீண்டும் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஆன்லைன் சூதாட்டத்தால் பலர் தற்கொலை செய்துகொண்டுள்ள நிலையில், மக்களின் வாழ்க்கைப் பிரச்னையாகக் கருதப்படும் இந்த மசோதாவுக்கு தமிழக ஆளுநர் உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று தினகரன் கூறியுள்ளார்.