கர்ப்பிணி பெண்ணை கொலை செய்து பிரிட்ஜில் வைத்திருந்த முன்னாள் காதலன் கைது

அதிர்ச்சி தரும் சம்பவம்... 23 வயது கர்ப்பிணி பெண்ணை முன்னாள் காதலன் கொலை செய்து பிரிட்ஜில் வைத்த சம்பவம் அதிர்ச்சிையயும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தைச் சேர்ந்த 23 வயது செலினா ஆன் பிராட்லியை கடந்த வெள்ளிக்கிழமை முதல் காணவில்லை. இரண்டு குழந்தைகளுக்கு தாயான செலினா தற்போது மூன்றாவது குழந்தைக்கு விரைவில் தாயாகவிருக்கிறார்.

இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமையிலிருந்து காணாமல் போனதால் குடும்பத்தினர் புகார் அளித்து காவல்துறையினர் தேடி வந்தனர். சந்தேகத்தின் பேரில் கடந்த திங்கள் கிழமை செலினாவின் முன்னாள் காதலனின் வீட்டில் தேடியபோது செலினா கழுத்து மற்றும் முகத்தில் படுகாயங்களுடன் சமையலறையில் இருந்த பிரிட்ஜில் கொலை செய்யப்பட்டு பிணமாக வைக்கப்படிருந்தார் .

அதிர்ச்சியடைந்த காவல்துறையினர் , அவரது முன்னாள் காதலன் வில்லியம் ஜேம்ஸை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். செலினா கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.