ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று மாலை டெல்லி செல்கிறார்

சென்னை: இன்று டெல்லி பயணம் ... தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும், ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் கருத்து வேறுபாடு நிலவி கொண்டு வருகிறது. இதையடுத்து அண்மையில் செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்குவதாக முதல்வருக்கு, ஆளுநர் கடிதம் எழுதினார்.மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலையிட்டு, இந்த வகாரத்தில் மத்திய அரசின் தலைமை வழக்கறிஞரிடம் ஆலோசனை நடத்துமாறு ஆளுநருக்கு தெரிவித்தார். இதையடுத்து, தனது கடிதத்தை நிறுத்தி வைப்பதாக முதல்வருக்கு ஆளுநர் மீண்டும் கடிதம் எழுதினார்.

இந்த நிலையில் ஊழல் வழக்குகளில் சிக்கியுள்ள அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது நீதிமன்ற விசாரணை தொடங்க அனுமதி அளிக்குமாறும், நிலுவையில் உள்ள மசோதாக்களுக்கு ஒப்புதல்அளிக்கும்படியும் தமிழக சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, ஆளுநருக்கு கடிதம் எழுதினார். அக்கடிதத்துக்கு ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்து உள்ளது.

இதன் இடையே, ‘‘ஆளுநர் என்பவர் அரசியல்வாதி இல்லை. ஆளுநர் அரசியல் பேசக்கூடாது. தனது கடமையை மட்டும் செய்ய வேண்டும்’’ என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்திருந்தார்.

இதனை அடுத்து இந்த பெரும் பரபரப்பான அரசியல் சூழலில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, இன்று மாலை 5 மணிக்கு டெல்லி செல்கிறார். ஒருவாரம் டெல்லியில் தங்கி யிருந்து, அவர் ஆலோசனை நடத்தவு உள்ளதாக தகவல் கூறப்படுகிறது.