உதகை: சிபிசிஐடி போலீசார் ஒப்படைத்தனர்... கோடநாடு வழக்கு தொடர்பாக, பங்களாவில் சேகரிக்கப்பட்ட 9 வகையான பொருட்களை உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் ஒப்படைத்துள்ளனர்.
இந்த வழக்கில் பங்களாவில் போலீசார் ஆய்வு செய்தபோது, பங்களாவின் ப்ளூ பிரிண்ட் மற்றும் ஜெயலலிதா, சசிகலா ஆகியோரது அறைகளின் வரைபடங்கள், ஆவணங்கள், புகைப்படங்கள், கதவின் தாழ்பாள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டன.
அவற்றை நீதிமன்றத்தில் ஒப்படைத்துள்ள சிபிசிஐடி, வரும் 28 ஆம் தேதி வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரும்போது, இடைக்கால விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.