நடிகை சித்ரா தற்கொலை வழக்கு தொடர்பாக ஹேம்நாத் தந்தை கமிஷனரிடம் புகார் மனு

நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் டி.வி. நிகழ்ச்சி தொகுப்பாளருக்கு தொடர்பா? என்பது குறித்து விசாரிக்க வேண்டும் என்று கமிஷனர் அலுவலகத்தில் ஹேம்நாத் தந்தை ரவிச்சந்திரன் புகார் அளித்துள்ளார்.

பிரபல டி.வி. நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் அவரது கணவர் ஹேம்நாத் தற்கொலைக்கு தூண்டியதாக கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் ஆர்.டி.ஓ. விசாரணையும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஹேம்நாத்தின் தந்தையும், சித்ராவின் மாமனாருமான பி.ரவிச்சந்திரன் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று புகார் மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:

தற்போதுதான் எனக்கு பல சமூக வலைதளங்களில் வெளிவந்த தகவல்கள் மூலம் சித்ரா, ஏற்கனவே 3 ஆண்களை காதலித்துள்ளதாகவும், அதுமட்டுமல்லாமல் ஏற்கனவே நிச்சயதார்த்தம் வரை சென்று திருமணம் நின்றுள்ளதாகவும் தெரிய வருகிறது.