ஜெர்மனியில் பிரபல நகரங்களை விட்டு கிராமப்புறத்திற்கு செல்லும் மக்கள்

ஜெர்மனி: நகரத்தை விட்டு இடம் பெயரும் மக்கள்... ஜெர்மனியில் பிரபல நகரங்களை விட்டு புறநகர் மற்றும் சுற்றியுள்ள கிராமப்புறங்களை நோக்கி மக்கள் பயணிக்க ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மலிவு விலையில் வீடுகள் பற்றாக்குறையை எதிர்கொள்வதாலும், இனி அலுவலகத்தில் இருந்து வேலை செய்ய வேண்டிய அவசியமில்லை என சில இடங்களில் அறிவிக்கப்பட்டதாலும் அதிகமான மக்கள் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளனர்.

தரவு நிறுவனமான எம்பிரிகா ரெஜியோவின் புதிய பகுப்பாய்வின்படி, பெர்லின், ஹாம்பர்க், முனிச், கொலோன், ஃபிராங்க்ஃபர்ட், டஸ்ஸெல்டார்ஃப் மற்றும் ஸ்டட்கார்ட் போன்ற பெரிய ஜெர்மன் நகரங்கள் தங்கள் குடியிருப்பாளர்களை சுற்றியுள்ள மாவட்டங்களுக்கு அதிகளவில் இழக்கின்றன.

ஆய்வில், 2018 ஆம் ஆண்டில் 47.000 க்கும் அதிகமான மக்கள் ஏழு பெரிய ஜெர்மன் நகரங்களிலிருந்து நேரடியாக அருகிலுள்ள மாவட்டங்களுக்குச் சென்றுள்ளனர். 2021 ஆம் ஆண்டில், 56.600 பேர் தங்கள் முகவரியை நகரத்திலிருந்து புறநகர்ப் பகுதிகளுக்கு மாற்றினர்.

17.249 பேர் பேர்லினில் இருந்து அருகிலுள்ள மாவட்டங்களுக்குச் சென்றனர், 11.145 பேர் ஹாம்பர்க்கில், 7.894 பேர் கொலோனில் மற்றும் 6.653 பேர் பிராங்பேர்ட்டில் இருந்த வெளியேறியுள்ளனர்.


இந்த நகரங்களின் மக்கள்தொகை வலுவாக வளர்ந்த 2010 மற்றும் 2013 க்கு இடையில் காணப்பட்ட போக்கை இது மாற்றியமைக்கிறது என்று எம்பிரிகா தரவு நிறுவனமான எம்பிரிகா ரெஜியோ தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.