தமிழகத்தில் 96 % பேருக்கு முதல் தவணை தடுப்பூசியும் 91 % பேருக்கு 2-ம் தவணை தடுப்பூசியும் செலுத்தம் ... மா.சுப்பிரமணியன்

தூத்துக்குடி: தூத்துக்குடியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் கூறியதாவது ; தமிழகத்தில் மருந்து தட்டுப்பாடு குறித்த புகார்களுக்கு 104 என்ற எண் அறிமுகம்.

இதனை அடுத்து முதல் அமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின்படி 2 மாதங்களுக்குள் புதிதாக 4,308 மருத்துவர்கள், செவிலியர்கள் நியமிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தமிழகத்தில் பரவி வரும் காய்ச்சலை கட்டுப்படுத்துவதற்கு தொடர்ந்து சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

இதையடுத்து மூன்று நாட்கள் இருக்கும் இந்த காய்ச்சலானது பருவநிலை மாற்றத்தால் மட்டுமே ஏற்படுகிறது இந்த காய்ச்சலை தடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த மாதம் 30ம் தேதி வரை பூஸ்டர் தடுப்பூசிகள் இலவசம் என மத்திய அரசின் அறிவிப்பின்படி பூஸ்டர் தடுப்பூசி முகாமில் நடத்தப்பட்டு வருகின்றன.

மேலும் தமிழகத்தில் 96 சதவீதம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசியும் 91 சதவீதம் பேருக்கு இரண்டாம் தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் கூறினார்.