இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 5,747 பேருக்கு கொரோனா

இந்தியா: புதியதாக 5,747 பேருக்கு கொரோனா ... இந்தியாவில் கடந்த சில தினங்களாகவே கொரோனா தொற்று பாதிப்பு குறைந்து கொண்டே வருகிறது. இந்நிலையில் கடந்த 24 மணிநேரத்தில் இந்தியாவில் 5 ஆயிரத்து ,747 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டது. நேற்று 6 ஆயிரத்து 298 ஆக இருந்த கொரோனா பாதிப்பு இன்று 5 ஆயிரத்து 747 ஆக குறைந்துள்ளது.

இதனை அடுத்து இதுவரை இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,45,22,774 லிருந்து 4,45,28,524 ஆக அதிகரித்துள்ளது. மேலும் கடந்த 24 மணிநேரத்தில் 5,618 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.

எனவே இதன் மூலம் இதுவரை கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 4,39,47,756 லிருந்து 4,39,53,374 ஆக உயர்ந்துள்ளது. மேலும் இந்தியாவில் கொரோனாவுக்கு ஒரே நாளில் 29 பேர் பலியாகினர். இதுவரை மட்டும் 5,28,302 பேர் உயிரிழந்தனர்.

மேலும் நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 46,748 லிருந்து 46,848 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை நாடு முழுவதும் 216 கோடியே 41 லட்சம் 'டோஸ்' கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. இந்தியாவில் ஒரே நாளில் 23,92,530 கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.