லண்டன் இந்திய தூதரகத்தில் இந்திய தேசிய கொடிக்கு அவமதிப்பு

லண்டன்: இந்திய தேசியக் கொடி அவமதிப்பு... லண்டனில் உள்ள இந்திய தூதரகத்தில் இந்திய தேசிய கொடி அவமதிக்கப்பட்டுள்ளது என்ற தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பஞ்சாப் மாநிலத்தில் கடந்த மாதம், காலிஸ்தான் ஆதரவு சாமியார் அம்ரித் பால் சிங், காவல் நிலையத்தை முற்றுகையிட்ட தனது மகனின் ஆதரவாளர்களை விடுவிக்க முயன்றார்.

இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், காலிஸ்தான் ஆதரவு குழுக்கள் வளர ஆரம்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் பஞ்சாப் மாநிலத்துக்கு துணை ராணுவப் படையினர் அனுப்பி வைக்கப்பட்டு காலிஸ்தான் ஆதரவாளர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இந்நிலையில் இங்கிலாந்தில் உள்ள லண்டன் இந்திய தூதரகம் முன்பு திரண்ட காலிஸ்தான் ஆதரவாளர்கள் இந்தியாவுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி தேசிய கொடியை அகற்றிவிட்டு காலிஸ்தான் கொடியை ஏற்றினர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.