மணிப்பூரில் கலவரம் பரவாமல் தடுக்க இணைய சேவை தடை நீட்டிக்கப்பட்டது

மணிப்பூர்: இணைய சேவை தடை நீட்டிப்பு... மணிப்பூரில் கலவரம் மேலும் பரவாமல் தடுக்க இணையசேவைக்கான தடை நீட்டிக்கப்படுவதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மாநில உள்துறை ஆணையர் விடுத்துள்ள அறிக்கையில், வீடுகள் மற்றும் வளாகங்களுக்கு தீ வைப்பு போன்ற சம்பவங்கள் இன்னும் நடப்பதாகத் தெரிவித்துள்ளார்.

மேலும், சட்டத்தை பாதிக்கக்கூடிய வதந்திகள் மற்றும் வீடியோக்கள், புகைப்படங்கள் மற்றும் செய்திகள் பரவுவதைத் தடுக்க ஏழாவது முறையாக இணைய சேவைகளுக்கு ஜூன் 10 ஆம் தேதி வரை தடை நீட்டிக்கப்படுவதாகவும் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

மணிப்பூரில் மீண்டும் கலவரம் ஏற்படாமல் தடுக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.