கடற்படைக்கு ரபேல் விமானம் வாங்க பேச்சுவார்த்தை

புதுடில்லி: பேச்சுவார்த்தை... இந்தியக் கடற்படைக்கு 26 ரபேல் விமானங்கள் வாங்க இந்தியா- பிரான்ஸ் பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்தியக் கடற்படைக்கு 5.5 பில்லியன் டாலர் மதிப்பில் 26 ரஃபேல் விமானங்கள் வாங்குவது தொடர்பாக இந்தியா- பிரான்ஸ் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

பாதுகாப்பு அமைச்சகத்தின் கொள்முதல் கவுன்சில் ஒப்புதல் அளித்த நிலையில், ஒப்பந்தத்தின் அம்சங்கள் குறித்து விவாதிக்க பிரான்ஸ் நாட்டு அதிகாரிகள் குழுவினர் இந்திய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளனர். கடந்த வாரம் நடந்ததாகக் கூறப்படும் இந்தப் பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, விரைவில் ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று கூறப்படுகிறது.