இந்தியாவுக்கு நன்கொடையாக அளிப்போம் என்று அதிபர் டிரம்ப் அறிவிப்பு

நன்கொடையாக அளிப்போம்... இந்தியாவுக்கு வென்டிலேட்டர்களை நன்கொடையாக அளிப்போம் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறி உள்ளார்.

இது குறித்து அவர் டுவிட்டர் பதிவை வெளியிட்டு உள்ளார். அதாவது, கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் இந்தியாவுக்கு வென்டிலேட்டர்களை அமெரிக்கா நன்கொடையாக அளிக்கும் என்று கூறி உள்ளார்.

அவர் மேலும் கூறி இருப்பதாவது: இந்த தொற்றுநோய்களின் போது நாங்கள் இந்தியா மற்றும் பிரதமர் மோடிக்கு துணை நிற்கிறோம்.

கொரோனா தடுப்பூசியை உருவாக்குவதில் அமெரிக்கா இந்தியாவுடன் இணைந்து செயல்படுகிறது. ஒன்றாக இணைந்து நாம் கண்ணுக்கு தெரியாத எதிரியை வெல்வோம்! என்றும் கூறி உள்ளார்.