இந்த தேதி பிரதமர் மோடி தமிழகம் வருகை

சென்னை: ஒருங்கிணைந்த விமான நிலைய முனையத்தை திறந்து வைப்பதற்காக பிரதமர் மோடி அவர்கள் சென்னைக்கு வருகை தர உள்ளார்.

சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள விமான நிலையத்தில் புதிதாக ஒருங்கிணைந்த விமான முனையங்கள் கட்டப்பட்டு வருகின்றன.

எனவே இதற்கான முதல் கட்டடம் கட்டும் பணி நிறைவடந்துள்ளது. இதனை அடுத்து இதற்கான திறப்பு விழாவை வருகிற 27-ம் தேதி நடத்த விமான நிலைய அதிகாரிகள் அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.

இந்த நிலையில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த விமான நிலைய முனையத்தை பிரதமர் மோடி அவர்கள் திறந்து வைக்க உள்ளதாகவும், எனவே இதற்காக அவர் வருகிற 27-ம் தேதி சென்னைக்கு வருகை தர உள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து இந்த திறப்பு விழாவில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்க இருப்பதாகவும் விமான நிலைய அதிகாரிகள் அவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.