நடுக்கடலில் மயங்கிய நிலையில் கிடந்த பெண் பத்திரமாக மீட்பு

சில விஷயங்கள் நம்ப முடியாதவையாக இருக்கும். எப்படி இது நடந்தது என்றும் யோசிக்க தோன்றும். அந்த வகையில் கொலம்பியாவில் ஒரு சம்பவம் நடந்துள்ளது.

கொலம்பியாவில் 2 ஆண்டுகளுக்கு முன் மாயமான பெண் நடுக்கடலில் மயங்கிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

ஏஞ்சலிகா கெய்டன் என்ற அந்தப் பெண் தனது கணவருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் வீட்டை விட்டு வெளியேறினார்.

இந்த நிலையில் கடந்த 26ம் தேதி அட்லாண்டிகோ கடல் பகுதியில் சில மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது நடுக்கடலில் மயங்கிய நிலையில் ஒரு பெண் மிதந்து கொண்டு இருப்பதை பார்த்தனர். உடன் அந்த பெண் மீட்டு கரைக்கு கொண்டு வந்து மருத்துவமனையில் சேர்த்தனர்.

தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் அந்த பெண் 2 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன ஏஞ்சலிகா என்பது தெரிய வந்தது. அவர் இத்தனை நாட்கள் எங்கிருந்தார். நடுக்கடலில் எப்படி மயங்கிய நிலையில் கிடந்தார் என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.