நாடாளுமன்ற உறுப்பினர் அரவிந்தகுமாருக்கு தற்காலிக தடை

தற்காலிக தடை விதிப்பு... மலையக மக்கள் முன்னணி மற்றும் மலையக தொழிலாளர் முன்னணி ஆகியவற்றின் செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கு முன்னணி அரசியல் பிரிவுத் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் அ.அரவிந்தகுமாருக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.

20 ஆவது திருத்தச்சட்ட மூலத்துக்கு ஆதரவாக வாக்களித்தது தொடர்பில் விளக்கமளிப்பதற்காக அவருக்கு 14 நாட்கள் அவகாசம் வழங்குவதற்கும், அவர் வழங்கும் பதிலின் அடிப்படையில் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்று மலையக மக்கள் முன்னணி தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

மலையக மக்கள் முன்னணியின் மத்திய செயற்குழுக் கூட்டம் நேற்று ஹட்டனில் நடைபெற்றது. குறித்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.