மாரடோனாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக வழக்கு; விசாரணை நடத்த உத்தரவு

கால்பந்து ஜாம்பவான் மாரடோனாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக தொடரப்பட்ட வழக்கில் விசாரணை நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கால்பந்து உலகில் தனது அசாத்திய திறமையால் சாதனை படைத்தவர் மாரடோனா. கடந்த சில வாரங்களுக்கு முன்பு மூளையில் ஏற்பட்ட ரத்த கட்டிக்கு அறுவை சிகிச்சை செய்துகொண்ட அவர் தனது மகளின் வீட்டில் ஓய்வு எடுத்து வந்தார். ஆனால் கடந்த நவம்பர் 26-ந் தேதி திடீரென மாரடோனா மரணமடைந்துவிட்டதாக தகவல் வெளியானது.