பொதுமக்களை மாபியா கும்பல் மிரட்டவோ, அச்சுறுத்தவோ முடியாது

உத்தரபிரதேசம்: முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தகவல்… உத்தரபிரதேசத்தில் இனி பொதுமக்களை மாபியா கும்பல் மிரட்டவோ, அச்சுறுத்தவோ முடியாது என அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

உத்தரபிரதேசத்தில் போலீசார் நடத்திய என்கவுன்ட்டரில் மாபியா கும்பலை சேர்ந்த அசாத் கொல்லப்பட்டதை தொடர்ந்து அவரது தந்தையான அதிக் மற்றும் அதிக்கின் சகோதரரான அஷ்ரப் ஆகியோரை 3 பேர் சுட்டு கொன்றனர்.

போலீஸ் பாதுகாப்பில் இருவரும் அழைத்து செல்லப்பட்ட போதே கொல்லப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், லக்னோவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், உத்தரபிரதேசத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளதாக கூறினார்.