யுனெஸ்கோ அமைப்பில் மீண்டும் இணைய விருப்பம் தெரிவித்த அமெரிக்கா

வாஷிங்டன்: மீண்டும் யுனெஸ்கோ அமைப்பில் இணைய விரும்புவதாக அமெரிக்கா அரசு அறிவித்துள்ளது. ஐ.நா. அமைப்பில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வரும் நிலையில் அமெரிக்கா இந்த முடிவை எடுத்துள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையானது அமைதி மற்றும் பாதுகாப்பை பேணுவதற்கும், உலக நாடுகளுக்கு இடையே நட்புறவை வளர்ப்பதற்குமான பொது அமைப்பாகும். யுனெஸ்கோ அதன் துணை நிறுவனங்களில் ஒன்றாகும்.

கல்வி, பண்பாடு, அறிவியல் மற்றும் தொடர்பு துறைகளை ஊக்குவிக்கும் வகையில் செயல்படுகிறது. யுனெஸ்கோ அமைப்பின் நிரந்தர உறுப்பினராக அமெரிக்கா இருந்து வந்தநிலையில் ஜனாதிபதி டிரம்ப் ஆட்சியில் விலகி கொண்டது.

இஸ்ரேல்-பாலஸ்தீனம் மோதலில் ஐ.நா.வின் நிலைப்பாடு குறித்து எதிர்ப்பு தெரிவித்து இந்த முடிவை அமெரிக்கா எடுத்தது. அப்போது இஸ்ரேலும் யுனெஸ்கோ அமைப்பில் இருந்து வெளியேறியது. மீண்டும் யுனெஸ்கோ அமைப்பில் இணைய விரும்புவதாக அமெரிக்கா அரசு அறிவித்துள்ளது. ஐ.நா. அமைப்பில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்துவரும் நிலையில் அமெரிக்கா இந்த முடிவை எடுத்துள்ளது.