காங்கிரசின் கொள்கை இதுதான்... பிரதமர் மோடி விமர்சனம்

கான்கர்: பிரதமர் மோடி விமர்சனம்... ஊழல் மற்றும் வாரிசு அரசியல் தான் காங்கிரசின் கொள்கையாக எப்போதும் உள்ளது என்று பிரதமர் மோடி விமர்சித்துள்ளார்.

சட்டிஷ்கர் மாநிலம் கான்கரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய பிரதமர், முதலமைச்சர் பூபேஷ் பாகல் தலைமையிலான அரசு, கடந்த தேர்தலின் போது அளித்த வேலைவாய்ப்பு வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் இளைஞர்களுக்கு துரோகம் இழைத்து விட்டது.

தங்களது பிள்ளைகளையும், சொந்தக்காரர்களை மட்டுமே அரசு வேலையில் அமர்த்தியுள்ளது. மேலும் காங்கிரஸ் அரசு, மாநிலத்தை கொள்ளையடித்து விட்டதாகவும், ஊழல் செய்த யாரும் தப்ப முடியாது என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார்.