தென்மேற்கு பருவமழை அதிகளவு இருக்கலாம் என்று எச்சரிக்கை

புதுடில்லி: வானிலை மையம் எச்சரிக்கை... தென்மேற்கு பருவமழைக் காலம் புதிய வீரியத்துடன் இந்த வாரம் மேலும் மழையைக் கொண்டு வர உள்ளதாக இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது.

மத்திய மற்றும் கிழக்கு மாநிலங்களுக்கு பலத்த மழையும் வெள்ளப்பெருக்கும் ஏற்படலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த இரண்டு வாரங்களாக இந்தியாவின் வடமாநிலங்களில் வழக்கத்தை விட கூடுதலான அளவுக்கு கனமழை கொட்டியதால் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.

இந்த வாரம் மேலும் பல இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.