அட என்று அனைவரும் புருவம் தூக்கி வியப்புடன் பார்க்கின்றனர். எதை? ஏன் என்று தெரியுங்களா.
இந்த உலகில் எந்த ஒரு மனிதருக்கும் காரில் போக வேண்டும் என்று ஆசை இல்லாமல் இருக்காது. வசதியாக உள்ள சிலர் கார் வாங்க வேண்டும் என்று நினைப்பார்கள். பெரும் பணக்கார்களின் ஆசையோ ஃபேராரி, லம்போர்கினி, போர்ச்சே, பென்ஸ், பிஎம்.டபள்யூ போன்ற கார்களை வாங்க வேண்டும் என்பதுதான்.
அதுவும் லாம்போர்கினி கார் என்பது பலரின் கனவாக உள்ளது. இந்த நிலையில்,
துபாயில் சூப்பர் மார்க்கெட்டில் யாராவது மாம்பழங்கள் ஆர்டர் செய்தால்
அவர்கள் வீட்டிற்கு லாம்போர்கினி காரில் கொண்டு வந்து டெலிவர் செய்யும்
வசதியை ஏற்படுத்தி உள்ளார்.
இதைப் பலரும் ஆச்சர்யத்துடன் பார்த்து
வருகின்றனர். அப்புறம் என்ன சும்மாவா. கனவான ஒன்று நினைவாகும் போது எப்படி
இருக்கும். மேலும், இந்த சூப்பர் மார்கெட்டின் மேனேஜர் முகமது ஜெகன்சேப்
மாம்பழம் பழங்களின் அரசன் அதை அதற்குரிய மரியாதையுடன் கொண்டு செல்ல
வேண்டும் என தெரிவித்து மேலும் ஆச்சர்யமூட்டுகிறார்.