இந்திய இனிப்பு வகைகளில் ஒன்றான முந்திரி அல்வாவை வீட்டிலேயே செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் முந்திரி - 1 கப் சீனி - 1 கப் நெய் - 1/2 கப் கோதுமை மாவு - 1/2 கப் நீர் - 3 1/2 கப் குங்குமப்பூ - தேவையான அளவு பாதாம் - தேவையான அளவு பொடியாக்கப்பட்ட ஏலக்காய் - தேவையான அளவு செய்முறை பாதாமை பொடியாக நறுக்கி கொள்ளவும். ஒரு மிக்சியில் முந்திரிப் பருப்பைச் சேர்த்து அதை நன்கு அரைத்து வைத்து கொள்ளவும். ஒரு வாணலியில் தண்ணீர் ஊற்றி கொதிக்க ஆரம்பித்தவுடன் சர்க்கரை சேர்க்கவும். தண்ணீரை 4-5 நிமிடங்கள் கொதிக்க விடவும். கொதிக்கும் தண்ணீரிலே துளி குங்குமப்பூ சேர்க்கவும்.
ஒரு நான்ஸ்டிக் கடாயில் அரை கப் நெய் சேர்க்கவும். நெய் உருகியவுடன் கோதுமை மாவு சேர்த்து நன்கு கிளறவும். கட்டிகள் வராமல் இருக்க கைவிடாமல் கிளறவும். ஒரு நிமிடம் கழித்து அதில் முந்திரி தூள் சேர்த்து நன்றாக கலக்கவும். நெய் பிரிய தொடங்கும் வரை இதை குறைந்த தீயில் சமைக்கவும். பின்பு இதில் சர்க்கரை பாகை சேர்த்து தொடர்ந்து கிளறவும். கடைசியாக அதில் சிட்டிகை ஏலக்காய் தூள் சேர்த்து கிளறி சூடாக பரிமாறவும்.