விமான நிலைய பெண் ஊழியருக்கு கொரோனா... கட்டுநாயக்க சர்வதேச விமான நிலைய சுத்திகரிப்புப் பிரிவின் பெண் ஊழியருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய சுகாதார அலுவலர் வைத்தியர் சந்திகா விக்ரமசூரிய தெரிவித்துள்ளார்.
சிலாபத்தில் வசிக்கும் 50 வயதான பெண்ணொருவரே இவ்வாறு கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
குறித்த பெண் நேற்று மாலை நீர்கொழும்பு பொது வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்டு பி.சி.ஆர். சோதனைக்கு உட்படுத்தப்பட்டார். சோதனை
முடிவுகளில் அவர் கொரோனா தொற்றுக்குள்ளாகி உள்ளமை
உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த பெண் தற்போது
நீர்கொழும்பு வைத்தியசாலையிலிருந்து கொழும்பு தேசிய தொற்று நோய்
வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். இதற்கிடையில் கட்டுநாயக்க சர்வதேச
விமான நிலையத்தில் அவருடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய நபர்களிடம்
பி.சி.ஆர். சோதனைகளை முன்னெடுக்க நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும்
தெரிவிக்கப்பட்டுள்ளது.