தேங்காய்ப் பால் குடல் புண்களை ஆற்றும் தன்மை கொண்டது, மேலும் இது உடல் எடையினை அதிகரிக்கும் தன்மை கொண்டுள்ளதால் குழந்தைகளுக்குக் கொடுக்கலாம். இப்போது தேங்காய்பால் பாயாசம் செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளுங்கள்.
தேவையானவை:
தேங்காய் - 1 பச்சரிசி - அரை கப் ஏலக்காய்த்தூள் - ஒரு ஸ்பூன் வெல்லம் – 1/4 கிலோ காய்ந்த திராட்சை - 10 கிராம் முந்திரி - 10 கிராம் செய்முறை: வாணலியில் நெய் ஊற்றி முந்திரி, திராட்சையை வறுத்துக்
கொள்ளவும். அடுத்து தேங்காயில் தண்ணீர் சேர்த்து குறைந்தது 4 முறை பால்
எடுத்துக் கொள்ளவும்.
தேங்காய்ப்பாலை பாத்திரத்தில் ஊற்றி அரிசியைப்
போட்டு வேகவிடவும். அதனுடன் வெல்லம் மற்றும் தண்ணீர் சேர்த்து அரிசியுடன்
கலந்து முந்திரி, திராட்சை, ஏலக்காய்ப்பொடி சேர்த்து இறக்கினால் தேங்காய்ப்
பால் பாயாசம் ரெடி.