பூண்டு செரிமான சக்தியை தூண்டுவதிலும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கின்றது. அத்தகைய மகத்துவமான பூண்டில் ஆரோக்கியமான சாதம் செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
பூண்டு – 3 (பெரியது) பாசுமதி அரிசி - 2 கப் பச்சை மிளகாய் - 5 மல்லி - 1 டீஸ்பூன் சீரகம் - 1/2 டீஸ்பூன் பிரியாணி இலை - 1 சோம்பு - 1/2 டீஸ்பூன் முந்திரி - 10 வேர்க்கடலை - 10 நெய் - தேவையான அளவு உப்பு - தேவையான அளவு மிளகாய்த் தூள்- 1 ஸ்பூன் செய்முறை: பாசுமதி அரிசியை நீரில் 20 நிமிடங்கள் ஊற வைக்கவும். அடுத்து சீரகம் மற்றும் மல்லியை தண்ணீர் ஊற்றி அரைத்துக் கொள்ளவும்.
பின்னர்
குக்கரில் நெய் ஊற்றி முந்திரி, வேர்க்கடலை போட்டு வறுத்துக் கொள்ளவும்.
அடுத்து சோம்பு, பிரியாணி இலை மற்றும் பச்சை மிளகாய் போட்டு வதக்கவும்.
அதனுடன் அரைத்த பேஸ்ட் சேர்த்து தட்டி வைத்த பூண்டு, உப்பு, முந்திரி,
வேர்க்கடலை மற்றும் அரிசியைக் கழுவிப் போட்டு 3 கப் தண்ணீர் ஊற்றி 2 விசில்
விட்டு இறக்கினால் பூண்டு சாதம் ரெடி!!!