சென்னை: ஓட்டல் சுவையில் இட்லி சாம்பார் செய்து பாருங்கள். அதற்கான செய்முறை உங்களுக்காக.
தேவையான பொருள்கள் -பாசிப்பருப்பு - 50 கிராம்
பெரிய வெங்காயம் - 1
தக்காளி - 1
பச்சை மிளகாய் - 2
மிளகுத் தூள் - 1/2 தேக்கரண்டி
சீரகத் தூள் - 1/2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
வெந்தயத் தூள் - 1 தேக்கரண்டி
பெருங்காயத் தூள் - 1/4 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
மல்லித்தழை - சிறிது
தாளிக்க -நல்லெண்ணெய் - 3 மேஜைக்கரண்டி
கடுகு - 1/2 தேக்கரண்டி
கறிவேப்பில்லை - சிறிது
செய்முறை: ஒரு பாத்திரத்தில் பாசிப் பருப்பு மற்றும் அது மூழ்கும்
அளவு தண்ணிர், பெருங்காயத் தூள் சேர்த்து 15 நிமிடங்கள் வேகவைத்து தனியாக
எடுத்து வைக்கவும். பின் ஒரு வாணலியில் 3 மேஜைக்கரண்டி நல்லெண்ணெய் ஊற்றி
சூடானதும் கடுகு போட்டு தாளிக்கவும். கடுகு வெடித்தவுடன் கறிவேப்பில்லை,
வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
பின் பச்சை
மிளகாய் மற்றும் தக்காளி சேர்த்து நன்கு சுருள வதக்கவும். பின்னர் 1 1/2
கப் தண்ணீர் சேர்த்து மிளகுத் தூள், சீரகத் தூள், மஞ்சள் தூள், வெந்தயத்
தூள் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை கொதிக்க விடவும். கடைசியாக வெந்த
பருப்பை போட வேண்டும் .கொதித்து 2 நிமிடம் ஆனதும் மல்லித்தழையைப் போட்டு
இறக்கி விடவும்.