தேசிய கீதம் இசைக்கப்பட்ட போது உணர்ச்சி வசப்பட்ட ரோஹித்

மெல்போர்ன்: டி20 உலகக்கோப்பை போட்டியின் போது தேசிய கீதம் இசைக்கப்பட்ட போது ரோஹித் சர்மா மிகுந்த உணர்ச்சிவசப்பட்டார்.

டி20 உலகக் கோப்பை சூப்பர் 12 சுற்று ஆட்டத்தில் இந்திய அணி பாகிஸ்தானை எதிர்கொண்டது. பரபரப்பான இந்த ஆட்டத்தில் கடைசி பந்தில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்றது.

போட்டிக்கு முன்னதாக இரு நாட்டு தேசிய கீதங்கள் இசைக்கப்பட்டன. இந்திய அணியின் தேசிய கீதம் இசைக்கப்பட்ட போது கேப்டன் ரோகித் சர்மா மிகவும் உணர்ச்சிவசப்பட்டார். டி20 உலகக் கோப்பையில் முதல்முறையாக களமிறங்கிய ரோஹித் சர்மா, தேசிய கீதம் இசைக்கப்பட்டபோது உணர்ச்சிவசப்பட்டார்.

இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் காட்சிகளை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.