டெல்லிக்கு 153 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது பெங்களூரு அணி

இன்றைய ஐ.பி.எல். போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு 153 ரன்களை வெற்றி இலக்காக பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி நிர்ணையித்துள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இன்று நடைபெறும் 55-வது லீக் ஆட்டத்தில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டெல்லி கேபிடல்ஸ் அணியும், விராட் கோலி தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோது வருகின்றன.

அபுதாபியில் நடைபெறும் இந்த ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும். தோல்வி அடையும் அணி பிற அணிகளின் முடிவை பொறுத்தை அடுத்த சுற்று எட்ட முடியும்.

ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த போட்டியில், டாஸ் வென்ற டெல்லி கேபிடல்ஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதன்படி, பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி முதலில் பேட் செய்தது.

நிர்ணையிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு பெங்களூரு அணி 152 ரன்கள் குவித்துள்ளது. இதையடுத்து 153 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கு டெல்லி அணிக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பெங்களூரு அணியில் அதிகபட்சமாக தேவ்தத் படிக்கல் 50 ரன்கள் அடித்தார்.