நியூயார்க் அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதி சுற்றுக்கு போபண்ணா ஜோடி முன்னேற்றம்

நியூயார்க்: நியூயார்க்கில் நடந்து வரும் அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் கால் இறுதிச்சுற்றுக்கு போபண்ணா ஜோடி முன்னேறியுள்ளது.

கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்துடன் கூடிய அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடந்து வருகிறது.

ஆடவர் இரட்டையர் பிரிவு 3-வது சுற்று ஆட்டம் நடைபெற்றது. 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் ரோகன் போபண்ணா, ஆஸ்திரேலியாவின் மேத்யூ எப்டன் ஜோடி, அமெரிக்காவின் ஜூலியன் கேஷ், ஹென்றி பேட்டன் ஜோடி மோதியது.

இதில் போபண்ணா ஜோடி 6-4, 6-7 (5-7), 7-6 (10-6) என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று கால் இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது.