கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வரவேற்கும் விதமாக விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட புர்ஜ் கலிஃபா

13-வது ஐபிஎல் 2020 சீசன் போட்டி ஐக்கிய அரபு அமீரகம் துபாய், ஷார்ஜா, அபு தாபியில் நடைபெற்று வருகிறது. கடந்த சனிக்கிழமை ஐபிஎல் தொடர் தொடங்கியது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின. இதில் 5 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி பெற்றது. இந்த முதல் நாள் தொடக்க ஆட்டத்தை 20 கோடி பேர் கண்டுள்ளனர்.

இந்நிலையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இன்று தனது முதல் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்கிறது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இன்று தனது முதல் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்கிறது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் உரிமையாளர்களில் பாலிவுட் நடிகர் ஷாருக் கானும் ஒருவர் ஆவார்.

ஷாருக் கானை வரவேற்கும் விதமாகவும், கொல்கத்தா அணி ஐ.பி.எல். தொடரில் சிறப்பாக விளையாட வாழ்த்துக்கள் தெரிவிக்கும் விதமாகவும் உலகிலேயே மிக உயரமான கட்டிடம் என புகழ் பெற்ற புர்ஜ் கலிஃபா, கொல்கத்தா அணியின் லோகோவையும், முக்கியமான வீரர்களின் படங்களையும் கட்டிடத்தில் ஒளிரவிட்டு சிறப்பித்துள்ளது.

இந்த வீடியோவை கொல்கத்தா அணி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

Before the fireworks tomorrow, here's the curtain raiser! We won't stop, on our way to the
Thank you @BurjKhalifa for lighting up in #KKR colours.
What a welcome to the UAE tonight

#BurjKhalifa iyaar #IPL2020 #Dream11IPL#KKRHaiTaiyaar