மும்பையில் தோனிக்கு வெற்றிகரமாக நடந்து முடிந்த முழங்கால் அறுவை சிகிச்சை

மும்பை: ஐபிஎல் சென்னை அணி கேப்டன் தோனிக்கு வெற்றிகரமாக முடிந்த முழங்காலில் அறுவை சிகிச்சை நடந்து முடிந்துள்ளது. வலிகளுக்கு நடுவே கோப்பையை பெற்று அசத்தி விட்டார்.

சென்னை அணி கேப்டன் மகேந்திர சிங் தோனிக்கு, மும்பை மருத்துவமனையில் இடதுகால் மூட்டில் வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

ஐ.பி.எல் முழுவதும் முழங்கால் வழியால் அவதிப்பட்ட தோனி, முழங்காலுக்கு ஐஸ்பேக் வைத்து சமாளித்து விளையாடினார். ஐ.பி.எல் தொடரில், சி.எஸ்.கே அணிக்கு கோப்பையை பெற்றுக் கொடுத்த கையோடு அகமதாபாத்தில் இருந்து மும்பை சென்ற தோனிக்கு, அங்குள்ள தனியார் மருத்துவமனையில் முழங்காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

அறுவை சிகிச்சைக்கு பிறகு தோனி நலமுடன் இருக்கிறார். ஓரிரு நாள்களில் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்புவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.