உலக டேபிள் டென்னிஸ் போட்டி நடத்த கோவாவுக்கு அங்கீகாரம்

கோவா: அங்கீகாரம் கிடைத்தது... உலக டேபிள் டென்னிஸ் போட்டி, நாட்டின் மிகப்பெரிய சுற்றுலா தலமான கோவாவில் நடத்த உலக டேபிள் டென்னிஸ் கூட்டமைப்பால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

இதை அறிவித்த உலக டேபிள் டென்னிஸ் போட்டியின் நிர்வாக இயக்குனர் மாட் பவுண்ட், கோவா விளையாட்டு சங்கத்தின் செயல் இயக்குனர் கீதா நாக்வெங்கர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

கோவா சுற்றுலாத்துறை அமைச்சர் ரோகன் காந்தே இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு செய்தியாளர் சந்திப்பில் அறிவித்தார். நாட்டிலேயே முதன்முறையாக நடைபெறும் உலக டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடர் 2023 பிப்ரவரி 27 முதல் மார்ச் 5 வரை நடைபெறும்.

பனாஜி நகரின் தென்பகுதியில் உள்ள தலேகாவ் என்ற நகரில் உள்ள கோவா பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள ஷியாம பிரசாத் முகர்ஜி உள்ளரங்கத்தில் போட்டிகள் நடத்தப்பட உள்ளது.