சென்னை அணிக்கு இலக்காக 214 ரன்களை வைத்த குஜராத் அணி

மும்பை: ஐபிஎல் போட்டியில் இறுதியாட்டத்தில் குஜராத்தின் தொடக்க வீரர்கள் ஆரம்பம் முதலே அதிரடியாக ஆரம்பித்தனர். சிஎஸ்கே வீரர்கள் பல கேட்ச்களை பிடிக்க தவறி விட்டனர்.

கில் தோனியிடன் ஸ்டம்பிங் ஆனார். ஆனால் 20 பந்துகளில் 39 ரன்கள் எடுத்தார். அடுத்து களமிறங்கிய சாய் சுதர்சன் சாஹாவுடன் நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தனர். சாஹா 54 ரன்களில் தோனியிடன் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

சாய் சுதர்சன் அதிரடியாக விளையாடி பதிரனா ஓவரில் 96 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். கேப்டன் பாண்டியாவும் அதிரடியாக 21 ரன்கள் எடுத்தார். 20 ஓவர் முடிவில் குஜராத் அணி 214/4 ரன்கள் எடுத்தது.

சிஎஸ்கே சார்பாக தீபக் சஹார், ஜடேஜா, தலா 1 விக்கெட்டுகளையும் பதிரனா 2 விக்கெட்டுகளையும் எடுத்தனர்.