இவர் சொன்ன யோசனை எனக்கு பெரிதும் கைகொடுத்தது ...ஹர்திக் பாண்டியா

டிரினிடாட்: விராட் கோலி சொன்ன யோசனை தனக்கு பெரிதும் உதவியதாக இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா தெரிவிப்பு ... இந்திய அணி, மேற்கு இந்தியத் தீவுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் தொடரில் விளையாடி கொண்டு வருகிறது. டெஸ்ட் (1-0), ஒருநாள் (2-1) என இந்தியா தொடரை வென்று உள்ளது.

இதனை அடுத்து நேற்று நடைபெற்ற 3-வது ஒருநாள் போட்டியில் 200 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்கு பிறகு கேப்டன் ஹர்திக் பாண்டியா தெரிவித்தது.

“இந்த வெற்றி ரொம்பவே ஸ்பெஷல். இது போன்ற ஆட்டத்தை தான் எதிர்பார்க்கிறேன். இப்போட்டியில் நாங்கள் தோல்வியை தழுவி இருந்தால் என்ன நடக்கும் என்பதை அறிவோம். சக வீரர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தனர். அணியின் அங்கமாக விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா உள்ளனர். இருந்தாலும் அவர்களுக்கு ஓய்வு கொடுக்கப்பட வேண்டியது அவசியம்.

மேலும் அவர்கள் ஆடும் லெவனில் இல்லாத காரணத்தால் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கிறது. களத்தில் சிறிது நேரம் இருக்க விரும்பினேன். போட்டிக்கு முன்னர் விராட் கோலி உடன் அது பற்றி உரையாடினேன். அவர் சொன்ன யோசனை எனக்கு இப்போட்டியில் பெரிதும் கைகொடுத்தது” என ஹர்திக் பாண்டியா தெரிவித்திருந்தார்.