பிரெஞ்ச் ஓபன் பட்டம் வென்ற நடாலுக்கு ரோஜர் பெடரர் வாழ்த்து

20 கிராண்ட்ஸ்லாம் போட்டிகளை வென்றதற்காக நடாலை வாழ்த்துகிறேன் என்று ரோஜர் பெடரர் தன் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் ஸ்பெயின் வீரர் ரபேல் நடால் ஸ்பெயின் வீரர் ஜோகோவிச்சுக்கு எதிராகக் களம் இறங்கினார்.

இதன்மூலம் ஜோகோவிச்சை வீழ்த்தி முதல் செட்டை நடால் 6-0 என்ற கணக்கில் கைப்பற்றினார். மேலும் 6-2 என்ற கணக்கில் நடால் 2 வது செட்டை கைப்பற்றினார்.

அடுத்து 3 வது செட்டில் நடால் 7-5 என்ற கணக்கில் 3 வது செட்டைக் கைப்பற்றினார். இதன் மூலம் நடால் 6-0, 6-2, 7-5 என நேர்செட் கணக்கில் ஜோகோவிச்சை வீழ்த்தி நடால் வெற்றி பெற்றார், இதன்மூலம் சாம்பியன் பட்டம் வென்றார்.

இதன்மூலம் 13 வது முறையாக பிரெஞ்ச் ஓபனை வென்று சாதனைப் படைத்ததுடன் ரோஜர் பெடரரின் சாதனையை நடால் சமன் செய்துள்ளார். நடாலின் சாதனைக்கு ரோஜர் பெடரர் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் தன் ட்விட்டரில், ‘‘20 கிராண்ட்ஸ்லாம் போட்டிகளை வென்றதற்காக நடாலை வாழ்த்துகிறேன், உண்மையிலேயே எனக்கு அது பெருமையான விஷயம். அவர் 13 முறை பிரெஞ்ச் ஓபனை வென்றது வியக்கத்தக்க சாதனை’’ என்று தெரிவித்துள்ளார்.