இன்ஸ்டாவில் விராட்கோலிக்கு நன்றி தெரிவித்துள்ள ரோஜர்

சுவிட்சர்லாந்து: ரோஜர் பெடரர் தனது இன்ஸ்டாவில் இந்திய கிரிக்கெட் வீரர் விராட்கோலிக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

கடந்த 2022 லேவர் கோப்பை தொடருக்கு பின் டென்னிஸ் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக ரோஜர் பெடரர் அறிவித்திருந்தார். சமீபத்தில் லண்டனில் நடந்த லேவர் கோப்பை தொடரில் தன்னுடைய கடைசி ஆட்டத்தை பெடரர் ஆடினார். இதில் ஐரோப்பிய அணியும், உலக அணியும் நேருக்கு நேர் மோதின.

ஐரோப்பிய அணியில் இடம் பெற்றிருந்த ரோஜர் பெடரர், இரட்டையர் பிரிவில் ரபேல் நடாலுடன் இணைந்து விளையாடினர். பெடரர்- நடால் இணை போராடி தோல்வி அடைந்தது. கடைசி போட்டியில் விளையாடிய பிறகு ஃபெடரர் பேசுகையில், எனக்கு ஆதரவளித்து வந்த ரசிகர்கள், குடும்பத்தினர், நண்பர்களுக்கு நன்றி தெரிவித்து விடைபெற்றார்.

ரோஜர் பெடரர் ஓய்வு முடிவு அறிவித்ததற்கு கிரிக்கெட் வீரர் விராட் கோலி வாழ்த்து தெரிவித்திருந்தார். அதில், நீங்கள் டென்னிஸ் விளையாடுவதை நேரடியாக பார்க்கும் வாய்ப்பு எனக்கு 2018-ம் ஆண்டு ஆஸ்திரேலியன் ஓபன் தொடரின்போது கிடைத்தது. டென்னிஸ் விளையாட்டில் நீங்கள் ஒரு சிறந்த வீரர். உங்களுடைய வாழ்வில் அடுத்த பயணத்திற்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள் என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், விராட் கோலியின் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டேட்டஸில் பதிவிட்டு வெளியிட்ட ரோஜர் பெடரர், நன்றி விராட் கோலி. விரைவில் இந்தியா வருவேன் என்று தெரிவித்திருக்கிறார்.